சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரின் பிறந்த நாள் இந்தாண்டு முதல் அரசு விழாவாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அத்துடன் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.