சென்னை : ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை திநகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் டிடிவி தினகரன் மற்றும் அமமுக தொண்டர்கள் அனைவருக்கும் சசிகலா இனிப்புகளை வழங்கினார். பின்னர் பேசிய சசிகலா, அதிமுக-வினர் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக தேர்தலில் செயல்பட வேண்டும்.ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக்கடன் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது. நம்முடைய இலக்கு வெற்றி. புரட்சித்தலைவி நமக்கு சொல்லிவிட்டு சென்றது.