தற்கொலை செய்து கொண்ட எம்பி மோகன்பாய் சடலம் குடும்பத்திடம் ஒப்படைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி தொகுதி சுயேச்சை எம்பியாக இருந்தவர் மோகன் டெல்கர் (58). இவர் தொடர்ந்து 7வது முறையாக இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலை யில், தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த இவர், அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தது நேற்று முன்தினம் மதியம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் அவர் தற்கொலைக்கு முன்பு குஜராத்தி மொழியில் எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.

 சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு ஜெஜெ மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. எம்பியின் மரணம் தற்கொலையாகத்தான் இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கழுத்து கழுத்தில் இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். கொலாபா மண்டல உதவி கமிஷனர் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்.

Related Stories: