புதுடெல்லி: `டூல்கிட்’ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விவசாயிகளுக்கு ஆதரவான `டூல்கிட்’ விவகாரத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கடந்த 14ம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். இதையடுத்து, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்பு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இவ்வழக்கில் ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.