புனே: வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு பாஸ்டேக்கில் பணம் கழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேயை சேர்ந்தவர் வினோத் ஜோஷி. ஐடி ஊழியரான இவர், சேனாபதி சாலையில் உள்ள பள்ளிக்கு தனது மகளை காரில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளியில் செல்லாததால், காரை வீட்டிலேயே நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், வாசி சுங்கச்சாவடியில் அவரது பாஸ்டேக் வாலட்டில் இருந்து ரூ.40 கழிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. சிறிது நேரம் கழித்து,காலாப்பூர் சுங்கச்சாவடியில் அவரது வாலட்டில் இருந்து ரூ.203 கழிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.