கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி மோசடி தொடர்பாக கடந்த நவம்பரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா, அவரது தங்கை மேனகா கம்பீருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. இதன் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் அவர்கள் 2 பேருக்கும் கடந்த ஞாயிறன்று சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு வந்து விசாரணை செய்து கொள்ளலாம் என சிபிஐ.க்கு ருஜிரா கடிதம் எழுதினார்.