நாகர்கோவில்: குமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் குறித்து தேர்தல் பணிக்குழுவிடம் அறிக்கை பெற்று தேசிய தலைமை அறிவிக்கும் என்று முருகன் கூறினார். நாகர்கோவில் சட்ட மன்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பா.ஜ மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். 25ம் தேதி (நாளை) கோவைக்கு மோடி வருகிறார். 28ம் தேதி விழுப்புரம் கூட்டத்திற்கு அமித்ஷா வருகிறார். மார்ச் 8, 9 தேதிகளில் தேசிய தலைவர் நட்டா வருகிறார்.