பல்லாவரம்: பம்மல் நாகல்கேணியில் தொழிற்சாலை நிறைந்த பகுதியில் தொழிலாளர்களை குறிவைத்து ஹெராயின் போதைப்பொருள் விற்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது யூசுப் ஷேக் (31), முகமது உபயதுல் இஸ்லாம் (30), சபீர் அலி (26) மற்றும் ஜஹாங்கீர் ஷேக் (41) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் தங்கி, கட்டிட வேலை செய்வதுபோல், ஹெராயின் விற்றது தெரியவந்தது.