புதுடெல்லி; டெல்லியில் கொரோனா தடுப்புசி போட்ட சுகாதார ஊழியர் திடீரென பலியானார். அவரது மகன் இதுபற்றி புகார் அளித்துள்ளார். வடக்கு டெல்லி மாநகராட்சியில் சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ்குமார்(54). அங்குள்ள கேசவ்புரம் மண்டலத்தில் அதிகாரியாக அவர் இருந்தார். பிப்ரவரி 17ம் தேதி அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். திங்கட்கிழமை காலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் தீரஜ் அருகில் உள்ள திப்சந்த் பாந்து மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் பலியானார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து அறிய பிரேதபரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் எனது தந்தை இறந்தார் என்று ரமேஷ்குமார் மகன் தீரஜ் குற்றம்சாட்டினார். நேற்று அவர் கூறியதாவது:
கடந்த பிப்ரவரி 17ம் தேதி எனது தந்தை கோவிஷூல்டு முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதன்பின் அவர் வீட்டுக்குவந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.