பெங்களூரு: பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு எக்ஸ்ட்டீசி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு சி.சி.பி போலீசார் இந்திராநகர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்தனர்.