சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மழையை நம்பி பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் மழை இல்லாமல் பொய்த்து ேபாவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலை ஏற்படுகிறது. மற்றொருபுறம் காட்டு வனவிலங்குகள் படையெடுப்பால் விளைபயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குரங்கு மற்றும் காட்டு பன்றிகள் தாக்குதலால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு அரசு எந்தவித நிவாரணமும் தருவதில்லை.