மங்களூரு: தென்கனரா மாவட்டத்தில் மங்களாதேவி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மிங் இயந்திரம் பணம் திருட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தென்கனரா மாவட்டம் மங்களாதேவி அருகே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் இருவர் இயந்திரத்தில் ஸ்கிம்மிங் மிஷினை பொருத்தி பணத்திருட்டில் ஈடுபட முயன்றனர்.