ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற இருவர் கைது

மங்களூரு: தென்கனரா மாவட்டத்தில் மங்களாதேவி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மிங் இயந்திரம் பணம் திருட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.  தென்கனரா மாவட்டம் மங்களாதேவி அருகே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் இருவர் இயந்திரத்தில் ஸ்கிம்மிங் மிஷினை பொருத்தி பணத்திருட்டில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து, இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: