பாட்னா: பீகாரில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் 2021 - 22ம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். அதில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு தேர்ச்சி விகிதம், சாதி, மதம் போன்ற எந்தவொரு நிபந்தனையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.