×

உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்தில் சிக்கி மாயமான 136 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்‍க அம்மாநில அரசு முடிவு..!!

சமோலி: உத்தரகாண்டில் பனிச்சரிவு விபத்தில் மாயமான 136 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்‍க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி பனிப்பாறை பெயர்ந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தபோவன் பகுதி தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் அங்கு பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 206 பேரில் 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் சில உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. எஞ்சிய 136 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே இறந்துவிட்டதாக கருதப்படுவது வழக்கம். ஆனால் உத்தரகாண்ட் விபத்தை பொறுத்தவரை அதிகாரபூர்வமாக உயிரிழப்பை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Vutakand avalanche , Uttarakhand, avalanche, 136 people, casualties
× RELATED 2023ம் ஆண்டுக்காக UPSC இறுதித் தேர்வு...