டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. டெல்லி விமான நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட ஆன்லைன் சேவை தொடங்கியது. ஏர் சுவிதா என்ற இணையத்தில் கொரோனா பரிசோதனைக்கு பதிவு செய்யலாம். பயணிகள் சுயமாக தங்கள் விவரங்களைத் தாக்கல் செய்யலாம். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று உறுதி செய்யும் மருத்துவ அறிக்கையை பதிவிடுவதும் கட்டாயமாகிறது.