ராமேஸ்வரம்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அவர், கோயிலுக்கு வருவதற்கு குருக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை அருகே அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு விஜயேந்திர சங்கராச்சாரியார் நேற்று வந்தார். அவர், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி கருவறைக்குள் சென்று வழிபட்டார். சுவாமி சன்னதி கருவறைக்குள் செல்ல முயன்ற சங்கராச்சாரியாரை கோயில் குருக்கள் ஒருவர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.