சென்னை: கட்டண குறைப்பு எதிரொலியாக மெட்ரோ ரயில்களில் அதிகளவில் பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் பயணம் செய்தனர். வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு வழித்தடத்தை கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால், சேவை தொடங்கப்பட்ட அன்றே மெட்ரோ ரயில் கட்டணத்தை ₹70ஆக மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்த்தியது. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மாறாக கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் கட்டணத்தை ₹50 ஆக தமிழக அரசு குறைத்தது. இந்த கட்டண குறைப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த கட்டண முறைப்பு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.