சேலம்: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக பெட்ரோல் விலை பற்றிய மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு அவர்களின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் நடந்துள்ளது.சேலம் கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முஸ்லிம் ஜோடிக்கு நேற்று காலை திருமணம் நடந்தது.