சென்னை: திருக்கழுக்குன்றம் அருகே வீடுகளில் விரிசல், விவசாய நிலங்களில் படியும் பவுடர் என பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, விவிஐபியின் உறவினர் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கருமாரப்பாக்கம், குண்ணவாக்கம் ஆகிய இரு கிராம எல்லைகளை இணைக்கும் இடத்தில் ஒரு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியை 4 ஆண்டுகளுக்கு முன்பு விவிஐபியின் உறவினர் ஒருவர் இந்த குவாரியை வாங்கி நடத்தி வருகிறாராம். விதிகளுக்கு மாறாக பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வெடிவைத்து தகர்த்து அந்தப் பாறைகளில் இருந்து ஜல்லி மற்றும் எம்சாண்ட் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. மேலும் வெடி வைத்து தகர்ப்பதால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டினுள் தூசும் தும்புமாக கிளம்புவதால் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குவாரியை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.