ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன்கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250ல் இருந்து ரூ.5,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600 - ரூ.29,000 வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800 - ரூ.26,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: