புதுச்சேரி : புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகைக்கு ஆளுநர் தமிழிசையிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதன்பிறகு புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி அமலாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.