நாட்டில் ஊழல் என்கிற புற்றுநோய் அகற்ற, தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் : ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

சென்னை : தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருப்பதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விரும்ப ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் ஊழல் என்கிற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் என்றார். சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகள் இருப்பதாக சகாயம் விமர்சித்துள்ளார். ஊழல் செய்பவர்கள் மீது உயர் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று சகாயம் கூறினார். தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, “ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக லட்சியத்தோடு போராடுவோம். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன். மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதிகாரம் இருந்தால்தான் அதை செய்ய முடியும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன்.சுயநலத்துடன் பணியாற்றக்கூடாது. மற்ற கட்சிகள் போல வெடி கலாசாரம், தூதிப்பாடல் கூடாது. லட்சியமே முக்கியமாக, கொள்கை உணர்வோடு புதிய சமுதாயம் அமைத்திட நீங்கள் புறப்பட்டால், அதற்கு நான் வலதுகரமாக இருந்து துணை நிற்பேன்,என்றார்.

Related Stories: