சென்னை : தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருப்பதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விரும்ப ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் ஊழல் என்கிற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும் என்றார். சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகள் இருப்பதாக சகாயம் விமர்சித்துள்ளார். ஊழல் செய்பவர்கள் மீது உயர் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று சகாயம் கூறினார். தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.