வீட்டில் பிரிட்ஜ் பயன்படுத்துபவர்களா?

இன்றைய நவீன உலகில் அனைவரின் வீட்டிலும் பிரிட்ஜ் வந்து விட்டது. சின்ன சின்ன கிராமங்களில்கூட மக்கள் பிரிட்ஜ் பயன்படுத்த துவங்கி விட்டனர்.ஆனால் பிரிட்ஜில் என்னென்ன பொருட்கள் வைக்கலாம் என்ற விழிப்புணர்வு மக்களி டம் குறைவாகவே உள்ளன. எனவே பிரிட்ஜில் எந்த மாதிரியான பொருட்களை வைத்து பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்...

இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ப்ரிட்ஜில் வை த்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சி துண்டுகளை, ஓரிரு நாள்கள் ப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ப்ரிட்ஜில் வைத் திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளி யே எடுக்கும் போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியி ருக்கும். அதை சூடு படுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச் சியில் பாக்டீரியா வளர் வது அதிகமாக இருக்கும். எனவே, தனித்தனி அறைகள் கொண்டனர். ப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப் பயன்படுத்த வேண்டும்.

ஜூஸ்: ஜூஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ப்ரிட்ஜ் தேவை. ஜூஸை ப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற் றே புகாமல் அடைத்து வைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்ன சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பது போல வைத்திருப்பது அதன் ஆயுட் காலத்தை அதிகரிக்கும்.

பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிக பட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்து வைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங் களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.

உலர் பழங்கள்:  உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங் களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்து வைத்தாலும், குறிப்பிட்டகாலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம்.

தயிர்:இது உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறை ந்ததும் ப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாக பயன்படுத்து கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும்.

அப்படியே ப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.

கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங் களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரை வில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்கு காற்றோட் டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு பிரிட்ஜில் வைக்கலாம்.

கீரைகள்:கறிவேப்பிலை, கொத்த மல்லியை போலவே தான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையை சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதை தடுக்க ப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றை போட்டு வைத்தல் கீரை ப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களு க்குள் பயன்படுத்துவது நல்லது.

எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட் காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தை யுமே அப்படி வைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுக கட்டாமல், லேசானக் காற்றோ ட்டத்தில் ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதே போல சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்து வைத்து விட வேண்டியது அவசியம்.

மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப் பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.

Related Stories: