×

12 நாட்களில், 2.3 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: வெறும் 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சியில் உரையாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் முதியவர்கள் மற்றும் நோய்க உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை அடைவோம் என்றார். அச்சங்களுக்கிடையில், 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் சார்பாக உலகத்தின் மீதான நம்பிக்கை, நேர்மறை மற்றும் நம்பிக்கையின் செய்தியுடன் நான் உங்கள் முன் வந்துள்ளேன் என்றார்.


Tags : Modi ,health workers , 2.3 million health workers vaccinated in 12 days: PM Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...