விவசாயிகளை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம் : மத்திய அரசு மீது மம்தா பேனர்ஜி தாக்கு

கொல்கத்தா : விவசாயிகளை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம் என்று மேற்கு வாங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மான விவாதத்தின் போது முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.

பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட 6 பாஜக இல்லாத மாநிலங்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றின. தற்போது அந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்திய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விவசாயிகளை தேசத்திற்கு விரோதமானவர்கள் என்று சித்தரிக்க முயல்வதை ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும் டெல்லியின் நிலைமையை போலிஸாரால் சமாளிக்க முடியவில்லை என்றும், டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், சட்டங்களை வாபஸ் பெறுங்கள் அல்லது ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை சாடி மம்தா பானர்ஜி காட்டமாக பேசியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது, நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். 3 சட்டங்களை திரும்பப் பெற விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. அங்கு நடந்ததற்கு பா.ஜ.க. தான் பொறுப்பு. முதலில் டெல்லியை சமாளியுங்கள், பின்னர் வங்கத்தை நினைத்துப் பாருங்கள், என்றார்.

Related Stories: