திருவள்ளூர்: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று தே.மு.தி.க. தான் என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசி இருப்பது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய விஜய பிரபாகரன், மக்கள் ஆதரவு தராததால் தான், தே.மு.தி.க. கூட்டணியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். இல்லாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. தான் இருக்கும். அத்திவரதர் போல விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரளயம் ஏற்படும். கேப்டனைப் போல் ஊழலை ஒழிப்பேன் என்று எந்தத் தலைவராலும் கூற முடியாது என்று விஜய பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.