சென்னை: மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரியில் சிக்கி 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கண்டெய்னர் லாரி தானாக இரங்கி மோதியதில் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த முதியவர் சேகர் இறந்துள்ளார். கவனக்குறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் வையாபுரியை போலீசார் கைது செய்தனர்.