சென்னை: உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வந்த மருத்துவக் கல்லூரி கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது. அதிக கட்டண வசூல் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.