சென்னை: பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகளுடன் முகாமுக்கு அனுப்பப்படவுள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.