நாமக்கல் : நாமக்கல்-திருச்சி ரோடு ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி வளாகத்தில், நேற்று மாலை ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. பின்னர், சற்று நேரத்தில் அங்கு தரையிறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு வந்து ஹெலிகாப்டர் அருகில் நின்று செல்பி எடுத்து கொண்டனர். நாமக்கல் காவேரி நகரில் உள்ள அலுவலக முதல் மாடியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனம், விரைவில் கோவை, நாமக்கல் இடையே ஹெலிகாப்டர் சேவையை தொடங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.