பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு மற்றும் குழிவயல் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தினந்தோறும் குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதால் கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.