ஆம்பூர் நாகநாதசுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்-கலெக்டர் வடம்பிடித்து துவக்கி வைத்தார்

ஆம்பூர் :  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் பங்களிப்புடன் ₹18 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.

பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. கோயில் அர்ச்சகர் தியாகராஜ சிவாச்சாரியார் அனைவரையும் வரவேற்றார்.

இதில் கலெக்டர் சிவன்அருள் வடம் பிடித்து தேரை இழுத்து வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் தாசில்தார் பத்மநாபன், டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால், நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர், தேர் கமிட்டியை சேர்ந்த தண்டபாணி, மார்கபந்து, சோமநாதன், ஏபி மனோகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Related Stories: