சென்னை: ரயில்களில் மீண்டும் நடமாடும் சிற்றுண்டி சேவையை தொடங்குவது குறித்து 4 வாரத்தில் ரயில்வே முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட போது சிற்றுண்டி வழங்குவதும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய டெண்டரை ரத்து செய்து, பழைய டெண்டர் முறையில் சிற்றுண்டி சேவையை தொடர அனுமதி வழங்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.