×

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன. இதனிடையே வேதா நினைவு இல்லத்தை திறக்க நிபந்தனைகளுடன் ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக பொது மக்களை பார்வையிட அனுமதிக்க கூடாது என ஹைகோர்ட் கூறியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு வேதா நினைவு இல்லம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், எடப்பாடி பழனிச்சாமி வேதா இல்லத்தை ரிப்பன் வெட்டியும் நினைவு இல்ல கல்வெட்டினையும் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். இல்லத்தை திறந்த பிறகு வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை ஏற்றி வைத்தனர்.முன்னதாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வேதா நிலையத்திற்கு உள்ளே!!

*வேதா நிலையம் 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.

*இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிளாக் அன்டு ஒயிட்அரிய புகைப்படங்கள்,

*அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜெ

இதே போல சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தை மற்றும், அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உருவச்சிலையையும் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.


Tags : Palanisamy ,Jayalalithaa ,residence ,station ,Vedha , Edappadi Palanisamy, Vedha Station
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...