வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

தங்கவயல்: பங்காரு பேட்டை காரள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. சம்பவத்தன்று  வேலை விஷயமாக வீட்டில் இருந்த அனைவரும் வௌியில் சென்றிருந்தனர். இதனை நேடமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச்சென்றனர். வீட்டிற்கு திரும்பிய நாராயணசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பங்காரு பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

Related Stories: