தங்கவயல்: தங்கவயல் அருகே தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களின் அருகே தாழ்த்தப்பட்டவர்களின் நாய்கள் கூட வரக்கூடாது என்று உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக, எஸ்.சி, எஸ்.டி.மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் சமதா சைனிக் தள அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். தங்கவயல் மாவட்ட போலீஸ் சார்பில் எஸ்.பி.இலக்கியா கருணாகரன் தலைமையில் எஸ்.பி.அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி.மக்களின் குறை கேட்பு கூட்டம் நடந்தது. இதில் சமதா சைனிக் தள தலைவர் ஜெரி ஜெயகுமார் பேசும் போது, தங்கவயல் தாலுகாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.