புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றிய அரங்கத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ராஜாஜி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ்(பாமக) பேசுகையில், “ஜெகநாதபுரம், மாலிவாக்கம், குதிரைபள்ளம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குதிரைபள்ளம் கிராமத்தில் தனியார் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள கொசஸ்தலை ஆறு மற்றும் விவசாய நிலங்களில் விடுவதால். விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்” என்று கோரி்க்கை வைத்தார்.