×

சிறுவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ்(16). கடந்த 23ம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது கஞ்சா போதையில் வந்த 5 பேர் வழிமறித்து வீண் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். புகாரின்பேரில் மெரினா போலீசார் திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3வது தெருவை சேர்ந்த ரவுடி அஜித்(எ)அஜித்குமார்(23), ராயப்பேட்டை துவாரகா நகர் 5வது தெருவை சேர்ந்த ரவுடி ராஜேஷ்(எ)போண்டா ராஜேஷ்(20), மந்தைவெளி சுப்பராயன் தெருவை சேர்ந்த விஜய்குமார்(19), திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தை ேசர்ந்த சோமு(எ)சோமநாதன்(21), விஷால்(23) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : 5 arrested for stabbing boy
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...