×

ஆரல்வாய்மொழி அருகே 2 கிலோ கஞ்சா சிக்கியது: 4 பேர் கைது

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே 2 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆரல்வாய்மொழி அருகே உள்ள கண்ணன்புதூர் பட்டார்குளம் காலணி பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி  போலீசார் அங்கு சோதனையில்  நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த  நாகராஜன் (31) என்பவர் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி  போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்த வன்னியபெருமாள் என்ற வன்னி (21) என்பவரிடம் 650 கிராம் கஞ்சா. திருப்பதிசாரம் கீழூர், பாரத்தெருவை சேர்ந்த தளவாய் என்ற  பாண்டியன் (22) என்பவரிடம் பாங்கு பாட்டில், வடசேரி குன்னுவிளை சாம்பவர் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சரண்ராஜ் பி.எஸ்.என்.எல்லில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் அலுவலக வாளாகத்தில் 410 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். அதையும் போலீசார் கைப்பற்றினர்.

இவ்வாறு அவர்களிடம் இருந்து மொத்தம் 2.06 கிலோ கிலோ கஞ்சா மற்றும் ரூ.5000 மற்றும் பாங்கு பாட்டில் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் 4 பேர் மீதும் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags : Aralvaymozhi , 2 kg of cannabis seized near Aralvaymozhi: 4 arrested
× RELATED ஆரல்வாய்மொழி அருகே அனுமதியின்றி ஜெப கூட்டம் நடத்த எதிர்ப்பு