சென்னை: விவசாயிகளை அழைத்துப் பேசாமல் பிரதமர் பிடிவாதமாக இருப்பதுபோல், முதல்வர் பழனிசாமி அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடினார். பிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு எனவும் அறிவித்துள்ளார்.