காஞ்சிபுரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களை கண்டித்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் பல மாநில விவசாயிகள் குடியரசு தினமான நேற்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி னர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள், கட்சி சார்ந்த விவசாய சங்கங்கள் இணைந்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்டங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி இருசக்கர வாகன பேரணியாக சென்றனர்.