சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை விளையாட்டு திறனை அங்கீகரித்து, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு கலைக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற தமிழ் அறிஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து விளக்கி, தமிழ் மொழிக்கு அரும் பணி ஆற்றி வரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. வயதான நிலையிலும் விவசாயம் செய்யும் கோயம்புத்தூரை சேர்ந்த பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.