டெல்லி: மத்திய அரசின் தோல்வியே டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு காரணம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. இனிமேலாவது மத்திய அரசு முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.