கயா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குந்தி தேவி. தற்போது அவரது மகன் அஜய் யாதவ் இதே தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2013ல் நடந்த ஒரு கொலை வழக்கில் குந்தி தேவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி சங்கம் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் சுமிராக் யாதவ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குந்திதேவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.