டெல்லி: டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில பங்கேற்றவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டுள்ளோம், விரைவில் அவர்களை பிடித்து தருவோம் எனவும் பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.