பேட்டை : கோடீஸ்வரன் நகர் பகுதியில் காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஏஜென்சிகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே சென்றாலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அரசு, சிலிண்டருக்கு உரிய விலை நிர்ணயம் செய்து தனியார் ஏஜென்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வரும் காஸ் சிலிண்டருக்கான பில்லிங் தொகையை டெலிவரி செய்ய வரும் நபரிடம் கஸ்டமர்கள் செலுத்தி பெற்று கொள்வர். பில்லிங் தொகை தவிர மாடிகளில் ஏற்றி இறக்க வேண்டிய சூழலில் மக்களே கூடுதலாக பத்து அல்லது இருபது ரூபாய் கொடுப்பது வழக்கம்.