களக்காடு : களக்காடு வடமலைசமுத்திரம் குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஜீயர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். களக்காடு அருகே வடமலைசமுத்திரம் குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோயிலில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு யாக சாலையில் பல்வேறு பூஜைகள் நடந்த வந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று காலை கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து உற்சவர் குருவாயூரப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.