சென்னை: ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் மூலம் தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பது உறுதியானது. ராகுல் காந்தி சென்ற வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக கூடிநின்று மகிழ்ச்சிப் பெருக்கோடு வரவேற்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.