அசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்

திண்டுக்கல் : அசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள்’’ என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அமைச்சரிகளில் சர்ச்சை பேச்சுக்குப் பெயர் பெற்றவர்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். திண்டுக்கல் சீனிவாசனிடம் இருந்து சர்ச்சையை பிரிக்க முடியாது என்ற அளவுக்கு இவரின் பேச்சுகள் இருக்கும். அண்மையில் இயேசு நாதரை சுட்ட கோட்சே என்றும் திருக்குறளை எழுதியது அவ்வையார் என்றும் மேடையில் பேசி சர்ச்சைக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், திண்டுக்கல் நாகல்நகரில் அதிமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு  பேசுகையில், ‘‘நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள். தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள். எங்கள் சட்டசபை தொகுதியில் முடிந்தவரை செய்துள்ளோம்’’ என்றார். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அமைச்சர் உளறி கொட்டியது அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: