டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி விரட்டும் போலீஸ் : கண்ணீர் புகை குண்டு வீசி வருவதால் எல்லையில் பதற்றம்!

புதுடெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்துள்ளனர்.

*மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் குடியரசு தினநாளான இன்று  3 லட்சம் டிராக்டர்களில்‘கிசான் காந்தந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்தனர். .

*அதன் படி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் தேசியக் கொடி கட்டி டெல்லிக்கு படையெடுத்த நிலையில், சிங்கு எல்லையில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. சிங்குவில் மட்டும் 50,000 டிராக்டர்களில் பேரணி நடைபெறுகிறது.

*குடியரசு தின விழா காரணமாக பிற்பகல் 12 மணிக்கு மேல் பேரணி நடத்த விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை மீறி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைந்தனர்.

*விவசாயிகளை அங்கிருந்து கலைக்க சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் போலீசார் 7க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

* விவசாயிகள் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, முன்னேறிச் செல்ல முயன்றதால், போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர்.இதனால் டெல்லியின் சிங்கு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

*அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது போலீஸ் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

*டெல்லியில் குடியரசு தினவிழாவும் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: